நியூஸ் பேப்பரில் உணவு வாங்கி சாப்பிடுபவரா நீங்கள்? அச்சச்சோவ் போச்சி!

பொதுவாக நாம் மளிகை கடை, டீக்கடைகள், தெருவோர கடைகளுக்கு செல்லும்போது உணவு பொருட்களை செய்தித்தாள்களில் வைத்து நமக்கு தருவார்கள். இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை உணவு பொருட்களில் கலப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த மையில் ரசாயனங்கள் உள்ளன. இது உணவை மாசுப்படுத்தும். இந்த மாசுபட்ட உணவை நாம் சாப்பிடும்போது உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் செய்தித்தாள்கள் என்பது பல கட்டங்களை தாண்டி வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அந்த செய்தித்தாள்களில் பாக்டீரியா, வைரஸ்கள் உள்பட பல நோய் கிருமிகள் இருக்கலாம். இந்நிலையில் நாம் செய்தித்தாள்களில் உணவு வைத்து உண்ணும்போது நமக்கு நோய்கள் ஏற்படாமல். இதனால் வியாபாரிகள் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

அதோடு பொதுமக்களும் செய்தித்தாள்களில் உணவு பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

thedal.lk
Logo
Register New Account
Compare items
  • Total (0)
Compare
0